Wednesday 2 July 2014

குறள் உரைச் ‘சிற்பி‘


தமிழ்ச் சமூகத்தில் திருக்குறளின் பயன்பாட்டு மதிப்பை விடப் பண்பாட்டு மதிப்பே மேலோங்கியிருக்கிறது.
     ‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்புஎனத் திருக்குறளாக்க முறைமையைத் தொகுத்துச் சொல்கிறார் பரிமேலழகர்     (குறள் : 322 உரை).

ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம்!



நூலைப்படி – சங்கத்தமிழ்
நூலைப்படி – முறைப்படி
நூலைப்படி
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி – என்பார் பாரதிதாசன்.
 இரசிகமணி டி.கே.சி.யோ சங்கப்பாட்டுகள் சங்கடப் பாட்டுகள் என்று ஒதுக்குவார்.  ‘தொடங்கையில் வருந்தும்படி இருக்கும்’ என்று பாரதிதாசனும் சங்கடத்தை ஒத்துக் கொண்டாலும் ஊன்றிப்படித்தால் அடங்கா இன்பம் என்கிறார்.